கொழும்பில் 6,00,000 போலி அமெரிக்க டொலர் நோட்டுகளை வைத்திருந்த நால்வர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து 600,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்தில் கைதானவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Source: https://samugammedia.com/four-people-arrested-with-600000-fake-us-dollars-1780898726

