முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலையில் மக்கள் காணியை அபகரித்துள்ள பிக்கு: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள்


Courtesy: H A Roshan

திருகோணமலை (Trincomalee) – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட திரியாய்
மக்களின் விவசாய நிலம், அரிசி மலைப்பிக்குவினால் அடாவடியான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் விவசாயிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை குச்சவெளி பிரதேச செயலகத்துக்கு அனைத்து விவசாயிகளையும் உரிய ஆவணங்களுடன்
வருகை தருமாறு புல்மோட்டை பொலிஸ் உயர் அதிகாரி பணித்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

குச்சவெளி கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ், நேற்றைய தினம் (10)  2024ஆம் ஆண்டுக்கான பெரும்போக வயற்
செய்கைக்காக மக்கள் தங்கள் காணிகள் அளவீடு செய்யச் சென்றவேளை குறித்த
காணிகளில் அளவீடு செய்ய விடாது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

மீள் குடியேற்றம்

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த புல்மோட்டை பொலிஸ் உயர் அதிகாரி மேற்படி விவசாயிகளை பிரதேச செயலகத்துக்கு வருமாறு பணித்துள்ளார்.

திருகோணமலையில் மக்கள் காணியை அபகரித்துள்ள பிக்கு: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் | A Monk Is Grabbing People S Land In Trincomalee

திரியாய் மக்களின் பூர்விக வயல் நிலங்களில் ஒன்றான வளத்தாமலையடி, ஆதிக்காடு, வேடன்
குளம், போன்ற 880 ஏக்கர் விஸ்தீரனமுடைய 125 வருடப் பழமை வாய்ந்த ஆங்கிலேயர் காலத்து உறுதி உடைய
காணிகள் ஆகும்.

1985 ஆம் ஆண்டு வரை அந்நிலங்களில் வயற்செய்கை மேற்கொண்டு வந்த நிலையில் 1985ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மக்கள்
பல்வேறு மாவட்டங்களிற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, 1990ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் வந்து இக்காணிகளில் மானாவாரி நெற்
செய்கையை செய்துள்ளனர்.

இதன்போது, ஏற்பட்ட இன கலவரத்தினை தொடர்ந்து 2002ஆம் ஆண்டு மீண்டும் தமது
சொந்த நிலங்களுக்கு மீள குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் பணிப்புரை 

இருந்த போதும் போரினால் வாழ்வாதாரங்களை இழந்த விவசாயிகள் 2020ஆம் ஆண்டு மீண்டும் தமது வயல் நிலங்களில்
வயற்செய்கை மேற்கொள்ளச் சென்றவேளை புல்மோட்டை அரிசி மலைப் பிக்குவினால் மக்களின் அனைத்து காணிக்காணிகளும்
அடாவடியான முறையில் காணிகள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கு கடுமையான
அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

திருகோணமலையில் மக்கள் காணியை அபகரித்துள்ள பிக்கு: முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் | A Monk Is Grabbing People S Land In Trincomalee

2022ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மக்களின் காணிகளை மக்களிடம் கையகப்படுத்த
உத்தரவு பிறபித்த போதும் தொடர்ந்தும் அடாவடியான முறையில் பிக்கு ஒருவர் செயற்பட்டு
வந்த நிலையில் கடந்த 05.09.2024ஆம் திகதி விவசாய நடவக்கையில் ஈடபட்ட விவசாயிகளை தடுத்து நிறுத்தி மீண்டும் பிக்கு தனது அடாவடியை தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, உடனடியாக இப்பிணக்கு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிடம்
தெரியப்படுத்தப்பட்டு கடந்த 07.09.2024 ஆம் திகதி மாலை திருகோணமலை மாவட்ட
அரசாங்க அதிபர், பிக்கு உற்பட காணி உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து முழுமையான
விசாரணைக்குப் பிறகு உரிய ஆவணங்கள் உள்ள விவசாயிகள் உடனடியாக வயற்செய்கையில்
ஈடுபடுமாறு அனுமதி வழங்கியுள்ளார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.