புதிய அரசாங்கம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த ஊடக அடக்குமுறையை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள்
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதனை கட்சி என்ற ரீதியில் வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை எதிர்த்த ஜே.வி.பி கட்சிக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் செய்யும் உரிமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பிழையான வகையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
பாரதூரமான ஓர் நிலை
நாடு என்ற ரீதியில் இன்று ஜனநாயகம் தொடர்பில் பாரதூரமான ஓர் நிலைமையை இன்று எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை வீதியில் அடித்துக் கொலை செய்யும் அளவிற்கு மக்கள் மனதில் குரோதத்தை விதைத்த ஜே.வி.பி இன்று சமூக ஊடகங்களை முடக்குவதாகத் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிழையாக கைது செய்யப்பட்டுள்ளனர் என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.