மறைந்த தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) உடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அஞ்சலி செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) அநுரகுமார திஸாநாயக்க இன்று (31) விஜயம் செய்திருந்த நிலையில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் புகழுடல் அஞ்சலிக்காக யாழ்.மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை பாதிப்பால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த மாவை சேனாதிராஜா சிகிச்சைப் பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தனது 82 வது வயதில் கடந்த 29ஆம் திகதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





