யாழ். மாவட்டத்தில் 11,081 குடும்பங்கள் தமக்குக் காணிகள் இல்லை
என்றும், காணிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளன என்று யாழ்ப்பாணம்
மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, கடந்த 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம்
மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலர் பிரிவுகளில், காரைநகர் பிரதேச செயலர்
பிரிவில் 27 குடும்பங்களும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 823
குடும்பங்களும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவில் 796 குடும்பங்களும்,
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிரத்து 828 குடும்பங்களும்,
மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் 342 குடும்பங்களும், சண்டிலிப்பாய்
பிரதேச செயலாளர் பிரிவில் 568 குடும்பங்களும் காணி பிரச்சினை குறித்து கோரியுள்ளனர்.
புள்ளி விபரம்
பருத்தித்துறை பிரதேச செயலாளர்
பிரிவில் 730 குடும்பங்களும், வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவில் 456
குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 855
குடும்பங்களும், உடுவில் பிரதே செயலர் பிரிவில் ஆயிரத்து 176 குடும்பங்களும்,
தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 526 குடும்பங்களும், ஊர்காவற்துறை பிரதேச
செயலாளர் பிரிவில் 256 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில்
589 குடும்பங்களும், சங்கானை பிரதேச செயலர் பிரிவில் இருந்து 109
குடும்பங்களும் கோரிக்கை முன்வைத்துள்ளன.

அதற்கமைய, மாவட்டத்தில் 1,181 குடும்பங்கள் தமக்கு
காணிகளை வழங்குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திடம் கோரிக்கைகளை
முன்வைத்துள்ளன.
இவற்றில், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 2 குடும்பங்களுக்கும்,
சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் 38 குடும்பங்களுக்கும், வேலணை பிரதேச
செயலாளர் பிரிவில் 22 குடும்பங்களுக்கும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர்
பிரிவில் 85 குடும்பங்களுக்கும், ஊர்காவற்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 26
குடும்பங்களுக்கும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 72
குடும்பங்களுக்கும் என மொத்தமாக 352 குடும்பங்களுக்கு இவ்வாறு காணிகள்
வழங்கப்பட்டுள்ளன.
இருப்பினும், 10, 729 குடும்பங்களின் கோரிக்கைகள்
நிறைவேற்றப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

