பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான கணேமுல்லை சஞ்சீவ படுசொலைச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (22) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு, மாதம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
குறித்த இளைஞர் கணேமுல்லை சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட தினத்தில் நீதிமன்றத் தொகுதியில் கொலையாளிகளுக்கு உதவும் வகையில் செயற்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் கைதைத் தொடர்ந்து கணேமுல்லை சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

