தெஹிவளை- நெதிமால பகுதியில் உள்ள கடையொன்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு, சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரமுகரான படோவிட்ட அசங்கவின் உறவினர் மீது இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

