இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின்போது மீண்டும்
ஒருமுறை அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதிக அளவான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாக கூறப்படும், இரண்டு பல நாள்
மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை நேற்று(27) இரவு
அறிவித்துள்ளது.
பெருமளவு போதைப்பொருள்
இந்த நடவடிக்கை, இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு
பணியகத்தால் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் எந்தளவு தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன? இதன்போது கைது
செய்யப்பட்டவர்களின் விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முன்னரும் பல தடவைகளாக இதுபோன்ற போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.

