பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலான்னுகே 12வது தூண் பகுதியில் ஒரு பெண் மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை இந்த கொலை நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹுலான்னுகே பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.

பொலிஸார் விசாரணை
தற்போது நடைபெற்று வரும் விசாரணையில், இந்த கொலை தனிப்பட்ட தகராறின் காரணமாக நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக 59 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

