ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சீர்திருத்தங்களுக்கு, இந்திய பிரதமர்
நரேந்திர மோடி வலுவான ஆதரவை வழங்கியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை சீர்திருத்தங்கள் இனி ஒரு விருப்பமல்ல.
மாறாக
அது தேவை என்ற விடயத்தை, இந்தியா – பிரேசில் – தென்னாப்பிரிக்கா முக்கூட்டு
தெளிவாக உணர்த்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சி மாநாடு
இந்தியா – பிரேசில் – தென்னாப்பிரிக்கா (ஐடீளுயு) தலைவர்களின் உச்சிமாநாட்டில்
உரையாற்றிய மோடி, உலகம் துண்டு துண்டாகவும் பிளவுபட்டதாகவும் தோன்றும்
நேரத்தில், இந்தக்கூட்டினால், ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் மனிதநேயத்தின்
செய்தியை வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா டா
சில்வா ஆகியோருடன் உரையாற்றிய மோடி, மூன்று நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு
ஒத்துழைப்பை வலுப்படுத்த முன்மொழிந்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்த மூன்று நாடுகளும் நெருக்கமான
ஒருங்கிணைப்பில் முன்னேற வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியுள்ளார்.

