இலங்கையின் முன்னணி வங்கியியலாளர் ரியன்சி விஜேதிலகே இன்று காலை காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஹாட்டன் நேஷனல் வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் அதன்பின்னர் தலைவராகவும் பணியாற்றிய அவர், இலங்கை வங்கிகள் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
இவரது இறப்பிற்கு அஞ்சலி செலுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதி கிரியைகள் பற்றிய அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

