திருகோணமலை – வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தொல்லியல் இடங்களுக்குச்
சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்யும் நடவடிக்கை ஒன்றை தொல்லியல் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த கள ஆய்வு இன்று (24)
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தொல்லியல் அதிகாரிகள், வெருகல் பிரதேச செயலாளர் ,பிரதேச சபையின் தவிசாளர்,
பாதுகாப்பு அதிகாரிகள் ,வனஜீவராசிகள் திணைக்களத்தினர் என பலரின்
பிரசன்னத்துடன் இவ் கள விஜயம் இடம்பெற்றுள்ளது.
வெருகல் பிரதேச செயலகப் பிரிவு
வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அதிகமான இடங்கள், குறிப்பாக
குடியிருப்புக் காணிகள்,விவசாய காணிகள் என பல இடங்கள் தொல்லியல்
பகுதிகளுக்குள் காணப்படுகின்றன.

மேலும், இது விடயமாக கடந்த வெருகல் பிரதேச
ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.





