கொழும்பை அண்மித்த அதுருகிரிய பிரதேசத்தில் இருந்து ஒரு தொகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
அதுருகிரிய, கொரதொட்ட பிரதேசத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சோதனையின் போது, டி-56 ரக துப்பாக்கிகள் மூன்று மற்றும் 05 கைத்துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையை அடுத்து மேற்படி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

