தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினர் தங்களுடைய ஆட்சியதிகாரத்தினை தக்கவைப்பதற்காக இன்னும் பல விடயங்களை முன்னெடுப்பார்கள் என்று
பிரித்தானியாவிலுள்ள அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இனிவரும் காலங்களில் ஜனாதிபதியாக இருந்தவர்கள் யாரையும் கைது செய்ய மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
ரணிலின் கைதின் மூலம் இலங்கையினுடைய ஆளும் குழாம் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

