யாழில் வலிப்பு ஏற்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொல்லாலை வீதி,
இளவாலையைச் சேர்ந்த 67 வயதுடைய அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் என்பவரே இவ்வாறு
உயிரிழந்துள்ளார்.
ஆண் உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவ்வாறான
சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர்
இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்கு சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம்
தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.சாட்சிகளை இளவாலை பொலிஸார் நெறிப்படுத்தினர்.

