நுகேகொடையில் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரச எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன
பெரமுன கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர
மேற்படி அழைப்பை விடுத்துள்ளார்.
நுகேகொடை கூட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான
ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ள நிலையிலேயே, மொட்டுக்கட்சி தரப்பில்
இருந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம்
“இந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி
ஆரம்பமாகின்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு
விடுக்கின்றோம்.
இது தனி நபர்களைப் பிரசாரப்படுத்தும் கூட்டம் அல்ல.எனவே,
இதில் பங்கேற்பதால் கட்சிகளின் தனித்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் ஜானக வக்கும்புர மேலும் தெரிவித்துள்ளார்.

