வரவு செலவுத் திட்டத்தில் அரச சேவையாளர்களுக்கு 30 வீதம் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் மேலும் ஓய்வூதியக்காரர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்காக 13,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான அரச செலவினங்களுக்காக 4,434 பில்லியன் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும
அஸ்வெசும வழங்குவதற்காக 24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.அத்தோடு வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்படமாட்டாது.மேலும் நீண்ட கால வேண்டுகோளாக இருந்து பாவித்த வாகனங்கள் இறக்குமதிகள் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 80ஆவது வரவு செலவுத் திட்டமாகும்.
நாளை (8) முதல் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பு
நவம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாவது மதிப்பீடுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். இதன் பின்னர் நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலைவிவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவு-செலவுத் திட்ட விவாதம் நடைபெறும்.

