கிணற்றில் நீராடிய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கம்பர்மலை பகுதியைச் சேர்ந்த விபுலன் விதுசன் (வயது 18) என்பவரே
உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
கம்பர்மலை பகுதியில் உள்ள கிணற்றில் குறித்த இளைஞனும் அவரின் சகோதரர்கள்
மற்றும் நண்பர்கள் இணைந்து கிணற்றுக்குள் கயிற்றை கட்டி நீச்சல் பழகியுள்ளனர்.

இதில் குறித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சடலம்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

