இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ண (Asia Cup) இருபதுக்கு இருபது (T20) மகளிர் கிரிக்கெட் தொடர் இன்று முதல் (19) ஆரம்பமாகவுள்ளது.
அந்தவகையில், தம்புள்ளை (Dambulla) ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகும் குறித்த தொடரில், மொத்தம் 8 அணிகள் பங்கேற்கவுள்ளன.
அதன்படி, இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளது.
பலப்பரீட்சை
இதன்படி ஏ பிரிவில் இந்தியா (India), பாகிஸ்தான் (Pakistan) , நேபாளம் (Nepal) , ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய அணிகளும், பீ பிரிவில் இலங்கை (Sri Lanka), பங்களாதேஷ் (Bangladesh), மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

போட்டிகளின் முதல் நாளான இன்று, நேபாளம் – ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளும், இந்தியா – பாகிஸ்தான் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மகளிர் அணி
இலங்கை மகளிர் அணி ஆரம்ப சுற்றுப் போட்டியில் பங்கேற்கும் முதலாவது போட்டி நாளை (20) பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.

மேலும், அனைத்து போட்டிகளையும் விளையாட்டு ரசிகர்கள் இலவசமாக பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/women-s-asia-cup-t20-begins-in-dambulla-1721374520

