நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தில் வெற்றிடமாக நிலவிய ஆணையாளர் பதவிக்கு, இலங்கை நிர்வாகச் சேவையின் தரம் I அதிகாரியான யூ.எல். மதீஷா ஜினஞ்சலி ஜயதிலகவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவர் இதற்கு முன்னர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்பாளராக (அபிவிருத்தி) பணியாற்றி வந்ததுடன், நன்னடத்தை ஆணையாளர் பதவியின் கடமைகளை வினைத்திறனுடன் வழிநடத்துவதற்காக அவரிடமுள்ள தகைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்திற்கே இவ்வாறு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

