இந்த ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டும் 1 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன் தவணைகள் செலுத்தப்பட்டதாக அமைச்சு கூறியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதிக் காலகட்டத்தில், இறைவரித் திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் கலால் வரித் திணைக்களம் ஆகியவை தங்களின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை விட அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன.
பொருளாதார நிலைத்தன்மை
இது பொருளாதார நிலைத்தன்மைக்கு ஒரு வலுவான ஆதரவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், ஆண்டின் இறுதிக் காலாண்டுகளிலும் வருவாய் இலக்குகளைத் தாண்டி அரசாங்க வருவாயை வலுப்படுத்த அனைத்துத் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Source: https://ibctamil.com/article/govt-to-pay-off-1-billion-us-dollars-foreign-debt-1784702719

