இலங்கை (Sri lanka) அதிபருக்கான தேர்தல் நேரங்களில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளின் மதிப்பீடு உடனடியாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்படும் என்று காவல்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் இலங்கை அதிபர் தேர்தல் கடமைகளுக்காக காவல்துறையினருக்கான மதிப்பிடப்பட்ட செலவுகள் தொடர்பான அறிக்கைகளை, மாகாண காவல் தரப்புகளிடம் இருந்து கோருவதற்கு இலங்கை காவல்துறை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும், அதிபர் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு அரச அச்சகத் திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைவாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தல்
அரச அச்சகத் திணைக்களத் தலைவர் மற்றும் காவல் பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை அதிபர் தேர்தல் எப்பொது நடைபெறும் என இறுதி தீர்மானம் இன்னும் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/important-decision-taken-by-the-sri-lankan-police-1721004980

