ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதி துறையில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபை இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான பயிற்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதியாளர்கள்
இதன்போது சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் பிரதான கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டில் 650 வரையான ஏற்றுமதியாளர்களும் இந்த வருடத்தின் முதல் 06 மாதங்களில் 350 இற்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்களும் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தகவல் தொழில்நுட்பம், உணவு, குடிபானம், மரக்கறி, பழங்கள், கடல் உணவுகள், தேயிலை மற்றும் பெறுமதி சேர் பொருட்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளில் அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாக மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான 140 இற்கும் மேற்பட்ட வேலைத்திட்டங்களை இவ்வாண்டில் நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வருடாந்தம் 1000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்குவதே தமது இலக்காகும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/over-1000-new-exporters-join-sl-export-sector-1785384345

