மஹர சிறைச்சாலையில் புனரமைப்புப் பணிகள் இடம்பெறுவதால், அங்குள்ள 104 கைதிகள் தும்பர, வெலிக்கடை, பூஸா, களுத்துறை, பதுளை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இடமாற்றப்பட்ட கைதிகளின் பெயர் பட்டியல் மஹர சிறைச்சாலைக்கு வெளியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பார்வையாளர் அனுமதி திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைக்குப் பின்னர் மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

