ஹெட்டன், பொல்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழையால் இன்று இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காணாமல் போனவர்களை மீட்கும் நோக்கில் பொலிஸார், இராணுவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இணைந்து பரந்தளவிலான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, தொடர்ச்சியான மழை காரணமாக நிலச்சரிவு அபாயம் நிலவும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான சந்தர்ப்பங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் அதிகாரிகளின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உயிர் பாதுகாப்பை முதன்மையாகக் கருத்தில் கொண்டு செயல்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

