தஞ்சையில் திங்கட்கிழமை (03) தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிப் பேசினார்.
அப்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு த.வெ.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், த.வெ.க. மகளிர் அணி சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதுடன், தேசிய மகளிர் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், செவ்வாய்க்கிழமை (04) அன்று உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

