மட்டக்களப்பு (Batticaloa) குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக் கதிர்காம சுவாமி ஆலயத்தின் வருடாந்த தேரோட்டம் இன்று (18) விமர்சையாக நடைபெற்றுள்ளது.
இம்மாதம் பத்தாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய பெருவிழாவின் தேரோட்டத்தை முன்னிறுத்தி விசேட கிரியைகள் ஆரம்பமாகி வசந்த மண்டப பூஜை இடம்பெற்று சுவாமி உள் வீதி வலம் வருதல் நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதற்காக முத்து இரதத்தில் வள்ளி தெய்வானை சமேதரராய் முருகப்பெருமான் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலித்தார்.
ஆயிரக்கணக்கான அடியார்கள்
இந்தநிகழ்வில் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டிருந்ததுடன் ஆலய கிரியை நிகழ்வுகள் யாவும் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ நவரத்தின முரசொலி மாறன் குருக்கள் தலைமையிலான குழுவினரால் மோற்கொள்ளப்பட்டன.

அரோகரா கோஷங்கள் முழங்க வேத பாராயணங்கள் ஒலிக்க வள்ளி செய்வானை சமேதரராக முருக பெருமான் மக்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும், நாளைய தினம் திங்கட்கிழமை (19) ஆவணி பூரணையில் சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Source: https://ibctamil.com/article/chariot-sri-chelak-kathirgama-swamy-temple-1723973605

