அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலம் அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பொருளாளர் டீ.எம்.எஸ். பசிந்து சில்வா மற்றும் அதே சங்கத்தின் உதவிச் செயலாளர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதுடன், பின்னர் மக்களால் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

