இலங்கையில் கடந்த சில நாட்களில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவங்களானது மிகவும் பேசுபொருளாகியுள்ளது.
மித்தெனிய துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் தந்தை மகன்,மகள் என மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கடுத்ததாக புதுக்கடை நீதிமன்றத்தில் போதைபொருள் கடத்தல் பாரர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்டமையானது நாட்டின் தேசிய பாதுகாப்பையே கேள்விக்குட்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் கொழும்பு – கொட்டாஞ்சேனையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சசிகுமார் என்ற தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தடுத்தாக இடம்பெற்ற இந்த துப்பாக்கிசூட்டு சம்பவங்களின் பின்னணி தொடர்பில் கலந்துரையாட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி(Azath Salley) இன்றைய 23.02.2025 ஊடறுப்பு நிகழ்ச்சியில் நேரலையாக கலந்துக்கொண்டுள்ளார்.
இந்த நேரலையானது, இலங்கை நேரம் – இரவு 09.00 மணிக்கும்
பிரித்தானிய நேரம் – மாலை 3.30 மணிக்கும்
ஐரோப்பிய நேரம் – மாலை 4.30 மணிக்கும் ஒளிப்பரபாகின்றது.
Source: https://tamilwin.com/article/sri-lanka-gun-shoot-updates-udaruppu-live-today-1740321913

