புதிய இணைப்பு
தாயகத்தின் விடுதலைக்காக
தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை, எமது இதயங்களில் இருத்தி நினைவேந்திக்கொள்ளும் ஒரு புனித கார்த்திகை மாதமான இன்று பொதுமக்களின் ஏற்பாட்டில் தரவை மாவீரர் துயிலும இல்லத்திற்கு இன்று (02/11/2024) சென்று முதலாவது சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.




மாவீரர் நாளுக்கு தயாராகும் யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்
தமிழினத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களின் நினைவு நாளுக்கான தயார்படுத்தல்கள் யாழ்ப்பாணத்தில் (Jaffna) ஆரம்பமாகியுள்ளன.
எதிர்வரும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில், தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் சாட்டி மாவீரர்
துயிலும் இல்லத்தில் இன்று (02) காலை துப்பரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
மாவீரர்களுக்கு நினைவேந்தல்
இதன்போது மாவீரர்களுக்கு பொதுச் சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

சிரமதானப் பணிகளில் மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், முன்னாள்
போராளிகள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவளை முல்லைத்தீவு (Mullaitivu) – ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் நேற்றையதினம் (01) சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Source: https://ibctamil.com/article/chaddy-maaveerar-thuyilum-illam-prepare-for-nov-27-1730538027

