தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய ஆளுநர்களும் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் இன்று(02) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளனர்.
அதன்படி, தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவிப் பிரமாணம்
அதேவேளை, வடமேற்கு மாகாண ஆளுநராக நசீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

நியமிக்கப்பட்ட இருவரும் அதிபர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/appointment-of-new-governors-1714631440

