2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றும் (11) இடம்பெறுகின்றது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு (Ministry of Science and Technology) மற்றும் டிஜிடல் பொருளாதார அமைச்சு (Ministry of Digital Economy) ஆகியவற்றின் செலவினத் தலைப்புக்களின் கீழ் இன்று குழு நிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதன்படி காலை 9.30க்கு சபாநாயகர் தலைமையில் ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 6.30 வரை நடைபெறவுள்ளது.
காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் 06.00 வரை 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான குழு நிலை விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் 196 ஆவது தலைப்பு மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 186 மற்றும் 227 ஆகிய தலைப்புக்களின் கீழ் நடைபெறவுள்ளது.
மாலை 6.00 முதல் 6.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி ஆரம்பமான குழுநிலை விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/BFpMjmjRbO0