யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையில் (Point Pedro) இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
பருத்தித்துறை – துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத
கொல்களத்தை இன்று (11) காலை முற்றுகையிட்ட போதே சாவகச்சேரி காவல்துறையினர் இந்த பசு மாடுகளை மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பிரதேசத்தில் அண்மையில்
வளர்ப்பு மாடுகள் திருடப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின்
அடிப்படையில் நீண்ட தேடுதலுக்கு மத்தியில் குறித்த சட்டவிரோத
கொல்களத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு
மீட்கப்பட்ட பசு மாடுகள்
இதன்போது மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஒரு மாட்டினை
காவல்துறையினர் மீட்டதுடன் ஏனைய இரண்டு மாடுகள் அடையாளம் காணப்படாத நிலையில்
சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றது.
இதேதேவேளை மட்டுவில் கிராமத்தில் திருடப்பட்ட ஏனைய மாடுகள்
இறைச்சியாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த சுற்றிவளைப்பின் போது மூன்று பசு மாடுகள் மீட்கப்பட்டதுடன் பசு மாடுகளை
கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனம் ஒன்றுடன் பிரதான சந்தேக நபர் ஒருவரும் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் வைரஸ் காய்ச்சல் : விடுக்கப்பட்டுள்ள பாரிய எச்சரிக்கை
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரகசிய சுரங்கப்பாதை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |