இந்தியாவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இந்த வெடிவிபத்தில் 15 பேர் சுரங்கப்பாதையில் சிக்கிக்கொண்டுள்ளதாக மீட்புகுழு தெரிவித்துள்ளது.
சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது ஆரம்பமாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சுரங்கத்தில் வெடிவிபத்து
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி எரிவாயுக் கசிவின் காரணமாகதான் இந்த வெடிப்பு ஏற்பட்டது என அந்நாட்டு பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றன.

Source: https://ibctamil.com/article/explosion-in-tunnel-near-power-plant-in-india-1784630607

