முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல்

நெற்செய்கைக்கான உர மானியமாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டை நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) பணிப்புரை விடுத்துள்ளார்.

உர மானியத் தொகையை விவசாயிகள் கணக்கில் வரவு வைப்பதில், சில வயல் உரிமையாளர்கள், பருவத்தைப் பொறுத்து நெல் விவசாயிகளை மாற்றுவதனால் பணம் வழங்குவதில் சில காலதாமதங்களும் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வருட சிறு போகத்தில் உரங்களை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கம் 5.4 பில்லியன் ரூபா விவசாயிகளின் கணக்கில் வரவு வைத்துள்ளது.

முறைப்பாடுகள்

இந்த நிலையில், இன்னும் சில விவசாயிகள் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படவில்லை என முறைப்பாடுகள் செய்துள்ளனர்.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

இந்நிலைமையை கருத்திற்கொண்டு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இன்று (27) விவசாய அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரின் பணிப்புரை

இதன்படி, சில வயல் உரிமையாளர்கள் தமது விவசாயிகளை பருவத்திற்கு பருவம் மாற்றுவதால் அவர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்படும் பணம் தொடர்பில் வெளியான தகவல் | Funds For Fertilizer By Gov Only For Small Farmers

எனவே, நெல் உரிமையாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளுக்கு மட்டும் உரம் கொள்முதல் செய்ய அரசு வழங்கும் நிதி மானியத்தை விடுவிக்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டு அனைத்து விவசாயிகளுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.