முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

பல்கலைக்கழக அமைப்பில் தீவிரமடைந்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காணும் நோக்கில், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரினி அமரசூரியவுடன் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாணவர் சேர்க்கை, விரிவுரையாளர் பற்றாக்குறை மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் நீண்ட காலம் செலவிட வேண்டிய நிலை உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய FUTA தலைவர் ருசிக பெர்னாண்டோ, மாணவர் சேர்க்கை கணிசமான காலத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்பதைத் தங்கள் சங்கம் புரிந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய ஆவணங்கள்.. 

மாணவர் சேர்க்கையை விரைவுபடுத்துவதற்காக ஜனாதிபதியுடன் ஏற்கனவே எட்டப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மற்றும் துணைவேந்தர்கள் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் இருந்தபோதிலும், அந்த முன்மொழிவுகள் இன்னும் ஜனாதிபதி செயலகத்தைச் சென்றடையவில்லை என்று பிரதமர் நேற்று தங்களுக்குத் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Futa Says Talks Pm Harini Yield No Solution

“நாங்கள் ஆச்சரியமடைந்தோம். சுமார் ஓராண்டாக நாங்கள் காத்திருக்கும் இவ்வளவு முக்கியமான ஒரு விடயம், இன்னும் உரிய இடத்தைச் சென்றடையவில்லை” என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நெருக்கடிக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதிலுமிருந்து விரிவுரையாளர்கள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றதாகவும், அது இரவு 10 மணி வரை நீடித்ததாகவும் FUTA செயலாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.

ஓராண்டு ஆகியும் ஜனாதிபதியை சென்றடையாத முக்கிய அறிக்கை.. கல்வி அமைச்சுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் | Futa Says Talks Pm Harini Yield No Solution

மேலும் அவர், கல்வித் துறையில் அரசாங்கத்திற்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், “இத்தகைய கலந்துரையாடல்கள் வைக்கோல் போரில் முள்ளைத்தேடுவதைப் போன்றவை.

அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாததால், அதனால் கல்வி குறித்துப் பேச முடியாது. எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நாங்கள் நிச்சயமாக முடிவெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் மாணவர் சேர்க்கையில் மேலும் தாமதம் ஏற்படும் என்றும், இது உயர்கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் FUTA எச்சரித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/futa-says-talks-pm-harini-yield-no-solution-1789620981

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.