2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 20 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
அத்துடன் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை முடிவுகளை வெளியிடத் திணைக்களம் திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகள்
எனினும் பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியதாக பரீட்சைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பரீட்சையில் மொத்தம் 331,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.