சுவிட்சர்லாந்தில் வலே மாநிலத்தில் மர்த்தினி நகரில் அமைந்திருக்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் கொடியேற்ற திருவிழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் இவ்வுலகநிறைவு ஆண்டுக்கான பெருந்திருவிழாவில், தலைமை அருட்சுனையராக ஒரு பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
திருக்கொடியேற்றம்
கடந்த15.06.2025 அன்று திருக்கொடியேற்றத்தினை செந்தமிழ் பெண் அருட்சுனையர் திருநிறை, சைவசீர்நெறிச் சிவத்திருமகள் உசாணி பகீரதன் ஆற்றிவைத்துள்ளார்.

எதிர்வரும் 24.06.2025 வரை திருவிழாக் காலத் தலைமை அருட்சுனையராக பெண் திருச்சடங்குகள் ஆற்றுவது, தமிழ் வழிபாட்டின் முன்னெடுப்பில் ஒரு தொலைகல் பயணம் கடந்து சிறந்து செல்வதாக அடியவர்கள் மகிழ்கின்றனர்.



