வடக்கிற்கு அமெரிக்க விமானங்கள் வருகை தந்தமையானது அவர்களின் ஆளுமையை நிரூபிக்கதான் என்று
பிரித்தானிய ராணுவ ஆய்வாளர் அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அமெரிக்காவின் போர்த்துறை அமைச்சுக்கும், இலங்கைக்கும் இடையில் இடம்பெற்ற மொன்டாரா ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் விமானங்கள் வருகை தந்துள்ளன.
இதுவரை காலமும் பலாலி விமானநிலையத்தை கண்டுகொள்ளாமலிருந்த நிலையில் அமெரிக்க விமானங்கள் அங்கு இறங்கியமையானது அவர்களின் ஆளுமையை நிரூபிக்கின்றது.
இந்தியாவானது கடல் மற்றும் வான் மேலாண்மையை இழந்துள்ளது எனலாம்.
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களை தன்சவசம் வைத்துள்ளதா என்றால் அதுவும் இல்லை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி…

