முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் ஈட்டப்படும் பாரிய வருமானம்: மனுஷ நாணயக்கார விளக்கம்


Courtesy: Ministry of Labour & foreign Emp

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வங்கிகள் மூலம் முறையாக டொலர்களை அனுப்பி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார். 

குருநாகல் (Kurunegala) வெலகெதர விளையாட்டரங்கில் நேற்று (21.07.2024) நடைபெற்ற ஒரு இலட்சம் புலம்பெயர்ந்த தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கூறுகையில், “நாட்டுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 2016 இல் 7.2 பில்லியன் டொலர்களும், 2018 இல் 7.1 பில்லியன் டொலர்களும், 2019 இல் 6.7பில்லியன் டொலர்களும் 2020 இல் 7.1 பில்லியன் டொலர்களும் அனுப்பப்பட்டுள்ளன.

பொருளாதார வீழ்ச்சி

2021ஆம் ஆண்டு இந்த தொகை 5.4 பில்லியன் டொலராகக் குறைந்து. இது மீண்டும் 2022ஆம் ஆண்டில் 3.7 பில்லியனாகக் குறைவடைந்து நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியுடன் டொலர் நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

/manusha-nanayakara-spoke-about-vacancies

எனினும், நான் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை பெறுப்பேற்றதன் பின்னர் இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார் மற்றும் எமது அமைச்சின் செயலாளர் ஆகியோர் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் இருந்து முறையாக வங்கி ஊடாக நாட்டுக்கு டொலர்களை கொண்டு வரும் இந்தப் பணியை முன்னெடுத்தோம். 

இதன் மூலம் 2022ஆம் ஆண்டு பெற்ற வருமானத்தை 5.9 பில்லியன் டொலர்களாக உயர்த்த முடிந்ததுடன் 2024இன் அரையாண்டுக்குள் நாட்டிற்கு 12 பில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பி வைத்ததன் மூலம் பாரியதொரு பங்களிப்பை வழங்கியுள்ளனர் .

அதேவேளை, புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்திடம் நாட்டுக்கு டொலர்களை அனுப்ப வேண்டாம். நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது எனக்கூறிய படி வீதிக்கு ஊடகவியலாளர்களுடன் சில அரசியல் தலைவர்கள் வந்து நாட்டை வீழ்த்த வேண்டுமானால் டொலர்களை அனுப்புவதை நிறுத்துங்கள் என கூச்சலிட்டனர்.

மின்சார வாகனங்கள் 

எல்லாவற்றையும் தாண்டி
அமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் ஜனாதிபதி எமக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் படி இந்த பணியை முன்னெடுத்ததன் மூலம் 12 பில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்து கையிருப்பை அதிகரித்து எரிபொருள், எரிவாயு மற்றும் பால் மா போன்றவற்றை வழங்கியுள்ளோம்.

/manusha-nanayakara-spoke-about-vacancies

வெளிநாட்டில் உழைக்கும் சமூகம் என்ற வகையில், இன்று நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒரு அங்கமாக அவர்களால் மாற முடிந்தது என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

மேலும், நாட்டுக்கு முறையாக டொலர்களை அனுப்பி வைத்தவர்களுக்கு மின்சார வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கும், வங்கிகள் மூலம் பணம் அனுப்ப சிலோன் ரெமிட் முறையை நடைமுறைப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயற்பட்டு வருகிறது.

அது மாத்திரமன்றி, 2.5 மில்லியன் முதல் 10 மில்லியன் வரை வட்டியுடன் கடன் வழங்கவும், பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் ஹோப்கேட் சிறப்பு கேட் சமூக பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைந்து ஓய்வூதி திட்டம், RPL முறை மூலம் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் NVQ தரச்சான்றிதழ்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் மேம்படுத்த செயற்பட்டு கொண்டிருக்கின்றது. 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இந்நிலையில், முதன்முறையாக வேலைக்குச் செல்பவர்களுக்கு 10,000 ரூபா வவுச்சரும், ஆறு முறைக்கு மேல் வெளிநாட்டிற்குச் சென்றவர்களுக்கு 25,000 ரூபாவுக்கு மேலான வவுச்சரும் வழங்கியதன் மூலம் இந்நிலை மேலும் மேம்படுத்தப்பட்டது.

/manusha-nanayakara-spoke-about-vacancies

வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து நிதியளிக்க முடிந்தது. ஐம்பதாயிரம் ரூபாவில் ஆரம்பித்து இன்று போராடும் தொழிலாளர் சமூகத்திற்கு பணியகம் இதுவரை இரண்டு பில்லியன்களை ஒதுக்கியுள்ளது.

மேலும். தொழில் முயற்சியாளர்களால் உருவாக்கப்பட்ட உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்கும் கருத்தாக்கத்திற்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பங்களிப்பதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்” எனவும் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.