ஆசிய விளையாட்டு வரலாற்றில் இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்த நாகலிங்கம் எதிரிவீரசிங்கம் காலமானார்.
1958 இல் டோக்கியோவில் நடைபெற்ற மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் உயரம் பாய்தல் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில்
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட நாகலிங்கம் எதிரிவீரசிங்கம், அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நிலையில் தமது 89 ஆவது வயதில் காலமானார்.

Source: https://ibctamil.com/article/nagalingam-edirweerasingham-passed-away-1713677726

