புதிய இணைப்பு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் இடம்பெறாது தேர்தல் தேர்வத்தாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்கு கட்சிகள் கட்டுப்பணங்களோ வேட்புமனுக்களோ செலுத்த முடியாது என கிளிநொச்சி
மாவட்ட தேர்தல் தேர்வத்தாட்சியும் மாவட்ட அரசாங்க அதிபரும் ஆகிய எஸ். முரளிதரன் (S. Muralitharan) ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழு
வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025
மார்ச் 20 வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு
நிறைவடையும் என்று அறிவித்துள்ளது.
இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தாக என மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தற்போது தேர்தல்கள் நடைபெற வேண்டிய உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் (Mannar), பூநகரி உட்பட 4 சபைகளுக்கு தேர்தல் அறிவிப்பு விடப்படவில்லை.
காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் அண்மையில் நடந்து முடிந்திருப்பதால் அச்சபைக்கான தேர்தல் இப்போது நடைபெறாது.
உள்ளூராட்சி சபைகளின் பட்டியல் வர்த்தமானி
நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 336 சபைகளுக்கே இப்போது தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அந்தப் பட்டியலில் மன்னார் பிரதேச சபை (மன்னார்
மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி
மாவட்டம்) மற்றும் கல்முனை மாநகர
சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களே
இப்போது அறிவிக்கப்படவில்லை.
இவை தொடர்பில் நீதிமன்றத்தில்
வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற
காரணத்தால் தேர்தல் அறிவிப்புகள்
இந்தச் சபைகளுக்கு விடப்படவில்லை.
மன்னார் பிரதேச சபை, தெஹியத்த
கண்டிய கண்டிய பிரதேச சபை, பூநகரி
பிரதேச சபை ஆகியவற்றுக்காக 2023
இல் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்பாகவே வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டு நிலுவையில் இருக்கின்றன.
தேர்தல் ஆணைக் குழு
இப்போது அந்த வேட்புமனுக்கள்
முழுமையாக இரத்துச் செய்யப்பட்டு
விட்டமையால் அந்த வழக்குகளை
விலக்கிக் கொள்ளும்படி கோரி நகர்த்தல்
பத்திரங்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் தேர்தல் திணைக்களத்தால்
தாக்கல் செய்யப்படவிருக்கின்றன.
நீதிமன்ற அனுமதி கிடைத்ததும்
அவற்றுக்கும் வேட்புமனுக்கள் கோரி அவற்றுக்கும் சேர்த்து ஒரே சமயத்தில்
நாடு முழுவதும் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான முயற்சியை தேர்தல் ஆணைக்
குழு மேற்கொண்டு இருப்பதாகத்
தெரிகின்றது.
கல்முனை மாநகர சபையைப் பொறுத்தவரை அந்த மாநகர சபையின் எல்லை
நிர்ணயம் மீளச் செய்யப்பட வேண்டும்
என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட
வழக்கு நிலுவையில் இருப்பதால் அது
முடிந்த பின்னரே அங்கு தேர்தல்
முன்னெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.
இவை தவிர்த்த 28 மாநகர சபைகள் 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச
சபைகளுக்கான தேர்தல்களே இப்போது
அறிவிக்கப்பட்டுள்ளன.