2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள் இன்று (11) மற்றும் நாளை (12) வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு நாட்களுக்குள் தபால் மூலம் வாக்களிக்காவிட்டால், அரச துறை ஊழியர்கள் வாக்களிக்க வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தபால் மூல வாக்காளர்கள்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் நாளான செப்டெம்பர் 21ஆம் திகதி தபால் மூல வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதன்காரணமாக, தபால் மூல வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்குமாறு கோரப்பட்டுள்ளது.