அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், புலம்பெயர்ந்தோரை தடுத்து நிறுத்தி அவர்களை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு போப்பாண்டவர் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளை வெளியேற்றுவேன் என ட்ரம்ப் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இந்நிலையிலேயே, போப் பிரான்சிஸ் இந்த தீர்மானத்திற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
தீங்காக முடியும் தீர்மானம்
அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்க ஆயர்களுக்கு போப் பிரான்சிஸ் எழுதிய கடிதத்திலேயே இது தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குடியேறிகளை வெளியேற்றும் தீர்மானம் தீங்காகவே முடியும் என போப் பிரான்சிஸ் எச்சரித்துள்ளார்.