எரிபொருள் விநியோகத்தின் போது பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறை நீக்கப்படுவது தொடர்பாக தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட அதன் தலைவர் டி. ஜே. ராஜகருணா, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்த அளவிற்கு இணையாக உள்ளூர் சந்தையில் விலை குறையவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு எந்தவிதமான தடைகளும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எரிபொருள் விநியோக முறையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில் QR முறை தொடருமா அல்லது மாற்றப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

