முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு

மன்னார் (Mannar) வைத்தியசாலை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) எந்தவிதமான அக்கறையும் இன்றி செயற்படுவதாக மன்னார் மக்கள்
குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலை தொடர்பிலும் அதன் குறைப்பாடுகள் தொடர்பிலும் அண்மைய
நாட்களாக பலவிதமான வாத பிரதிவாதங்கள் இடம் பெற்று வருகின்றன.

இந்தநிலையில், ஒரு மாவட்ட பொது வைத்தியசாலையில் காணப்படவேண்டிய அடிப்படைதேவைகள் கூட மன்னார்
வைத்தியசாலையில் காணப்படாததுடன் காயங்களுக்கு பயன்படுத்தப்படும்
பிளஸ்ரர் கூட இல்லாத நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மன்னார் வைத்தியசாலை

இதனடிப்படையில், மன்னார் மக்களின் வாக்குகளை பெற்று நாடாளுமன்றம் சென்று அமைச்சராக பணியாற்றிய ரிஷாட் பதியுதீன், மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் எந்தவித அக்கறையும் செலுத்தாமல் அண்மையில் புத்தளம் (Puttalam) மாவட்டத்தில் இடம் பெற்ற தனது கட்சி கூட்டத்தில் புத்தளம் வைத்தியசாலை தொடர்பில் பேசியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு | Rishad Faces Backlash Over Mannar Hospital

அத்தோடு, புத்தளம் வாக்காளர்களை கவருவதற்காகவும் அவர்களின் வாக்குகளை சுருட்டுவதற்காகவும்,  ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பத்து அம்ச
கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையாக புத்தளம் வைத்தியசாலையை அபிவிருத்தி
செய்வதையும் அதனை தரம் உயர்த்துவதற்கான கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாகவும் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மக்கள்

மன்னார் வைத்தியசாலை இவ்வளவு கேவலமான நிலையில் காணப்படுகின்ற போது ஐந்து வருடங்களுக்கு மேலாக அதை எட்டிக்கூட பார்காத முன்னாள் அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் புத்தளம் வாக்காளர்களை ஏமாற்ற இவ்வாறான கருத்துக்களை
தெரிவித்துள்ளமை மன்னார் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார் வைத்தியசாலை தொடர்பில் அக்கறையின்றி செயற்படும் முன்னாள் அமைச்சர் : முன்வைக்கப்பட்டுள்ள குற்றசாட்டு | Rishad Faces Backlash Over Mannar Hospital

அதுமாத்திரம் இல்லாமல் கடந்த வருடம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்
மருந்து தட்டுப்பாடு உட்பட பல பிரச்சினைகள் நிலவி வந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், மன்னார்
மாவட்டத்தை சேர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்னார் பொது
வைத்தியசாலைக்கு விஜயம் செய்த போது முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
மாத்திரம் மன்னார் வைத்தியசாலைக்கு சமூகம் வழங்காது கிழக்கில் உள்ள சாமாந்துறை
வைத்தியசாலைக்கு விஜயம் செய்து குறைகளை கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.