இலங்கைக்கு வரும் அனைத்து குறுகிய கால சுற்றுலாப் பயணிகளும், 2025 ஒக்டோபர்
15, முதல் மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெற வேண்டும் என்ற குடிவரவு
மற்றும் குடியகல்வுத் துறையின் முன்னைய அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
2025 ஒக்டோபர் 13 அன்று வெளியிடப்பட்ட முடிவு மறு அறிவிப்பு வரும் வரை ரத்து
செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
மேலும் அனைத்து ETA மற்றும் விசா வழங்கும் சேவைகளும் தற்போதுள்ள நடைமுறைகளின்
கீழ் தொடர்ந்து செயற்படும்.

எனவே பயணிகள் ஒக்டோபர் 15, 2025 க்கு முன்பு இருந்த அதே செயல்முறையின் கீழ்
விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம்
அறிவித்துள்ளது.

