நெதர்லாந்து சிறிய லூர்து அன்னையின் புனித யூபிலி ஆண்டை சிறப்பிக்க நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த திருவிழாவானது செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சிறப்பாக இரக்கத்தின் ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
திருச்சொருப பவனி
மேலும் சிறப்பு நற்கருணை ஆராதனை அன்றையதினம் காலை 11.00 மணிக்கும் திருநாள் திருப்பலியும் அன்னையின் திருச்சொருப பவனியும் மதியம் 1.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அன்னையின் சிறப்பு ஆசீர் பெற அனைவரையும் ஆலயச் சமூகம் அழைத்துள்ளது.