2025/2026 ஆம் ஆண்டுக்கான திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் (Bar association – Trincomalee) தலைவர் தேர்வில் தமிழ் பெண்மணி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அந்தவகையில் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியாக சட்டத்தரணி
புனிதவதி துஷ்யந்தன் தெரிவு செயயப்பட்டுள்ளார்.
குறித்த
தெரிவானது நேற்றைய தினம் (25.03.2025) திருகோணமலை (Trincomalee)நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
சங்க தலைவியாக தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க தலைவியாக தெரிவாகிய இவர் திருகோணமலையை
வசிப்பிடமாகக் கொண்டவரும் யாழ்பாணம் (Jaffna) – காரைநகரை பிறப்பிடமாக கொண்டவராவார்.
2005ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் (University of Colombo) இவர் சட்டமானி பட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து 2006ம்
ஆண்டு உயர் நீதிமன்ற சட்டதரணியாக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.