தமிழ் இனப்படுகொலை பொறுப்பு கூறலை பயன்படுத்தி இலங்கை இராணுவத்தை அமெரிக்கா (America) தன்பக்கம் இழுத்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னாள் படைத்துறை மற்றும் உலவுத்துறை தலைவர்கள் மற்றும் சகாக்களை எல்லாம் தமிழ் மக்களுக்கான பொறுப்பு கூறல் என்ற விடயத்தின் ஊடாக தண்டிப்போம் என்ற சமிஞ்சையை காட்டி தன்பக்கம் அமெரிக்கா ஈர்த்துள்ளது.
ஜெனிவா மனித உரிமையையும் மற்றும் இலங்கை மக்களையும் பயன்படுத்தி இலங்கையை முழுவதுமாக தன் பக்கம் இழுப்பதற்கான சகல முயற்சிகளையும் அமெரிக்கா முன்னெடுத்து வருகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் மக்களின் எதிர்காலம், இனப்படுகொலைக்கான தீர்வு, சர்வதேச அரசியலில் இலங்கையின் தாக்கம் மற்றும் தற்போதைய அரசின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் அவர் தெரிவித்த மேலதிக கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/9KnNcNAcfV8?start=1
Source: https://ibctamil.com/article/the-future-of-tamil-eelam-under-donald-trump-rule-1741911393

